tamilni 313 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு தேவையற்ற விதத்தில் பணமும் சலுகைகளும்

Share

அரச ஊழியர்களுக்கு தேவையற்ற விதத்தில் பணமும் சலுகைகளும்

அரச நிறுவனங்களின் நட்டத்திற்கு அதன் ஊழியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களே பொறுப்புக் கூற வேண்டும். இவர்களுள் சிலருக்கு தேவையற்ற சலுகைகள் கிடைக்கும், தேவையில்லாமல் பணமும் பெறுகின்றனர் என்று களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் எச். எம். நவரத்ன பண்டா தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எந்த நிறுவனமும் தொடர்ந்து நட்டம் அடைந்து கொண்டிருந்தால், அந்த நிறுவனத்தை அரசின் கையில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.

ஏனென்றால் அதற்குக் காரணம் பொதுமக்களின் வரிப்பணத்தில் பயனற்ற ஒரு அமைப்பை நடத்துவதுதான். ஆனால் அதற்கு அங்குள்ள ஊழியர்கள் பொறுப்புக் கூற வேண்டும், அதில் உள்ள நிர்வாக அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

அரசு நிறுவனங்கள் நட்டம் அடைந்தால், அதற்கான பொறுப்பு அதன் ஊழியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்குச் செல்கிறது. ஏன் நட்டம் ஏற்படுகின்றது என்பதை அவர்கள் முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

முதலில், தோல்வியடைந்தவர்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால் தனியார் மயமாக்கப்பட்டால் பிரச்சினை இல்லை. முதலில் எந்தெந்த துறைகளில் நட்டம் ஏற்படுகின்றது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

சிலருக்கு தேவையற்ற சலுகைகள் கிடைக்கும். தேவையில்லாமல் பணம் பெறுகிறார்கள். இது போன்ற விஷயங்களை நிர்வகிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

இறுதி முடிவை எடுப்பதற்கு முன் பல விஷயங்கள் உள்ளன. அந்த விஷயங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நட்டநட்டம் என்றால் என்ன, இழப்புக்கான காரணம் என்ன? தீர்வு இல்லை என்றால், தனியார்மயம் என்று சொல்வதை செயல்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...