tamilnih 8 scaled
உலகம்செய்திகள்

ஒரே நாளில் உக்ரைன் 234 வீரர்கள் சண்டையில் மரணம்!

Share

ஒரே நாளில் உக்ரைன் 234 வீரர்கள் சண்டையில் மரணம்!

உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் முயற்சியில், அந்நாட்டின் 234 வீரர்களை கொன்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் வீரர்களின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில் ரஷ்ய பாதுகாப்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன.

செவ்வாயன்று நடந்த சண்டையில், உக்ரைன் வீரர்கள் 234 பேர் தங்கள் படைகளால் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஷ்யா ராணுவம் மற்றும் எல்லைப் படைகள் தாக்குபவர்களை நிறுத்தவும், எல்லை தாண்டிய தாக்குதலைத் தவிர்க்கவும் முடிந்தது என கூறப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் 7 டாங்கிகள் மற்றும் 5 கவச வாகனங்களை இழந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பிராந்தியங்களில் என்ன நடக்கிறது என்பதை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அப்பகுதிகளில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் போர் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...