tamilnif 9 scaled
உலகம்செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

Share

நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் உண்டான நிலச்சரிவில் 26 பேர் பலியாகினர்.

கடந்த சில நாட்களாக தெற்கு சுமத்ரா தீவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கின.

அவற்றில் 14 வீடுகள் மண்ணில் புதைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 11 பேர் மாயமானதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 26 பாலங்கள், 13 சாலைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...