8 7 scaled
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மதுபானங்களுக்கான கேள்வி அதிகரிப்பு

Share

சட்டவிரோத மதுபானங்களுக்கான கேள்வி அதிகரிப்பு

நாட்டில் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பு காரணமாக விலைகள் உயர்வடைந்துள்ளன.

இதனால் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

விலை அதிகரிப்பு காரணமாக சட்ட ரீதியான மதுபான வகைகளுக்கான கேள்வியும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் மதுவரித் திணைக்களத்திற்கு வருமான இலக்குகளை அடைவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மதுவரி திணைக்களத்திற்கு அரசாங்கம் 232 பில்லியன் ரூபா என்ற வருமான இலக்கினை வழங்கியுள்ளது.

எனினும் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மதுவரித் திணைக்களத்தின் மொத்த வருமானம் வெறும் 33 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபானம் அருந்திய பலர் விலை அதிகரிப்பு காரணமாக சட்டவிரோத மதுபான வகைகளை நுகரத் தொடங்கியுள்ளதாகவும் சிலர் மதுபான நுகர்வினை கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...