8 7 scaled
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மதுபானங்களுக்கான கேள்வி அதிகரிப்பு

Share

சட்டவிரோத மதுபானங்களுக்கான கேள்வி அதிகரிப்பு

நாட்டில் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பு காரணமாக விலைகள் உயர்வடைந்துள்ளன.

இதனால் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

விலை அதிகரிப்பு காரணமாக சட்ட ரீதியான மதுபான வகைகளுக்கான கேள்வியும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் மதுவரித் திணைக்களத்திற்கு வருமான இலக்குகளை அடைவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மதுவரி திணைக்களத்திற்கு அரசாங்கம் 232 பில்லியன் ரூபா என்ற வருமான இலக்கினை வழங்கியுள்ளது.

எனினும் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மதுவரித் திணைக்களத்தின் மொத்த வருமானம் வெறும் 33 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபானம் அருந்திய பலர் விலை அதிகரிப்பு காரணமாக சட்டவிரோத மதுபான வகைகளை நுகரத் தொடங்கியுள்ளதாகவும் சிலர் மதுபான நுகர்வினை கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...