tamilni 203 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார்

Share

தமிழர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார்

தமிழர் ஒருவர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார் பெண்கள் மற்றும் சிறுமிகளை எச்சரித்துள்ளனர்.

குறித்த 10 பேரும் செயலிகளில் காணப்பட வாய்ப்பிருப்பதாகவும், அவர்களை கட்டாயம் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த நபர்களின் முகங்களை நினைவில் வைத்திருப்பதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Kevarnie Queen என்பவர் 22 துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி 16 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

Ilford பகுதியை சேர்ந்த 41 வயது சமீர் பட்டேல் 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்கு சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

Stanwell பகுதியை சேர்ந்த 32 வாயது ரதீசன் ரங்கநாதன் பல்வேறு துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி, 2022 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

Forest Gate பகுதியை சேர்ந்த 39 வயது அஷ்ரப் கான் என்பவர் மீது இரண்டு வன்கொடுமை வழக்கு மற்றும் ஒரு துஸ்பிரயோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

Richmond பகுதியை சேர்ந்த 21 வயது David Berbers சமூக ஊடகத்தில் அறிமுகமான இளம் வயது சிறுமி ஒருவரை வன்கொடுமை செய்துள்ளார்.

தெற்கு க்ராய்டன் பகுதியை சேர்ந்த 47 வயது Clint Osbourne மற்றும் 29 வயதான Jamie Maggioni ஆகியோர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு லண்டன் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...