tamilnaadi 96 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள விடயம்

Share

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள விடயம்

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை குற்றமற்றதாக்குமாறு இலங்கை அரசை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்கள் அமைப்பு மற்றும் பிரித்தானிய தமிழ் அமைப்புகளுடன் இணைந்து உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சர்வதேச அறிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் சமூகத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரையிலும் நடந்த குற்றங்களுக்கு நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான கோரிக்கையில் அந்நாட்டின் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டொனாக் தமிழ் சமூகத்திற்கு தனது தொடர்ச்சியான ஆதரவை இதன்போது வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தாயகம் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தமே குற்றமாக்குகிறது. அத்துடன் ஆறாவது திருத்தமே இலங்கையில் அல்லது வெளிநாட்டில், இலங்கையின் பிரதேசத்தில் தனிநாடு அமைப்பதற்கான ஆதரவை குற்றமாக்குகிறது. ஆகவே, ஆறாவது திருத்தத்தை இரத்து செய்வது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தமது ஆதரவை வழங்கவேண்டும் என்றும் டேம் சியோபைன் வலியுறுத்தினார். இந்தநிலையில் 13வது திருத்தம் மாகாண சபைகளின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் அதிகாரங்களை நிறுத்தி அவற்றை இலங்கை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள தெரிவு செய்யப்படாத ஆளுநர்களுக்கு வழங்குகின்றது.

பழங்காலத் தமிழ் வழிபாட்டுத் தலங்களை அரசு கைப்பற்றி சிங்கள பௌத்த விகாரைகளாக மாற்றும் போது தமிழர்கள் பலமற்றவர்களாகி விடுகிறார்கள் என்றும் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டொனாக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தீர்ப்பதில் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து வெளியுறவு செயலாளரும் முன்னாள் பிரதமருமான டேவிட் கேமரூன் தவறியமை குறித்து ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கையில் ஒரு வணிக துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக சீன அரசு நிறுவனத்துடன் கேமரூனின் உறவுகளை டேம் சியோபைன் விமர்சித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...