tamilni 168 scaled
சினிமாசெய்திகள்

சினிமா உனக்கு செட் ஆகாது.. பேசாமல் குழந்தை பெற்றுக்கொள்.. ஹன்சிகாவுக்கு குடும்பத்தார் போட்ட நிபந்தனை?

Share

சினிமா உனக்கு செட் ஆகாது.. பேசாமல் குழந்தை பெற்றுக்கொள்.. ஹன்சிகாவுக்கு குடும்பத்தார் போட்ட நிபந்தனை?

நடிகை ஹன்சிகா நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவதை அடுத்து சினிமா இனி உனக்கு செட் ஆகாது, குழந்தை பெற்றுக்கொள் என்று அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஹன்சிகா கடந்த 2011 ஆம் ஆண்டு ’எங்கேயும் காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அதன் பின்னர் தனுஷுடன் ’மாப்பிள்ளை’ விஜய்யுடன் ’வேலாயுதம்’ சூர்யாவுடன்’ சிங்கம் 2’ என வரிசையாக வெற்றி படங்களில் நடித்தார்

இந்த நிலையில் ’பிரியாணி’ ’மான் கராத்தே’ ’அரண்மனை’ ’வாலு’ ’அரண்மனை 2’ ’மனிதன்’ என தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு திடீரென ஒரு சறுக்கல் ஏற்பட்டது. அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து கொண்டிருந்த நிலையில் அவர் தனது 50 வது படமான ’மகா’ படத்தை மலைபோல் நம்பினார். சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்த படமும் தோல்வியடைந்த நிலையில் அதன் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் ஹன்சிகா கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹேல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இனி சினிமாவில் நடித்தது போதும், குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடு’ என்று அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி வருவதாகவும், தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு அனேகமாக ஹன்சிகா திரையுலகில் இருந்து விலகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...