9 5 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியல் சதுரங்க விளையாட்டில் மீண்டும் பசில்

Share

தென்னிலங்கை அரசியல் சதுரங்க விளையாட்டில் மீண்டும் பசில்

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மீண்டும் கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கமைய ஏழு பிரிவுகளாக செயற்படும் கட்சியின் உறுப்பினர்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிளவுகளுக்கான உண்மை நிலவரங்களை அடையாளம் கண்டு, அதனை சரியும் நடவடிக்கையை பசில் முன்னெடுத்து வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் பண்டார மற்றும் ஜயந்த கட்டகொட ஆகியோருக்கு, ஒன்றிணையக்கூடிய நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான டலஸ் அழகப்பெரும குழு, விமல் வீரவன்ச உள்ளிட்டோர், மைத்திரிபால சிறிசேன, பிரசன்ன ரணதுங்க, நிமல் லான்சா, நாமல் ராஜபக்ச, நாலக கொடஹேவா போன்றோர் 7 பிரிவுகளாக உடைந்துள்ளனர்.

இது பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதனை சரி செய்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள ராஜபக்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...