9 5 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியல் சதுரங்க விளையாட்டில் மீண்டும் பசில்

Share

தென்னிலங்கை அரசியல் சதுரங்க விளையாட்டில் மீண்டும் பசில்

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மீண்டும் கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கமைய ஏழு பிரிவுகளாக செயற்படும் கட்சியின் உறுப்பினர்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிளவுகளுக்கான உண்மை நிலவரங்களை அடையாளம் கண்டு, அதனை சரியும் நடவடிக்கையை பசில் முன்னெடுத்து வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் பண்டார மற்றும் ஜயந்த கட்டகொட ஆகியோருக்கு, ஒன்றிணையக்கூடிய நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான டலஸ் அழகப்பெரும குழு, விமல் வீரவன்ச உள்ளிட்டோர், மைத்திரிபால சிறிசேன, பிரசன்ன ரணதுங்க, நிமல் லான்சா, நாமல் ராஜபக்ச, நாலக கொடஹேவா போன்றோர் 7 பிரிவுகளாக உடைந்துள்ளனர்.

இது பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதனை சரி செய்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள ராஜபக்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...