15 2 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை குடும்பத்தின் படுகொலை பயங்கரமான வன்முறைச் செயல்: ட்ரூடோ

Share

இலங்கை குடும்பத்தின் படுகொலை பயங்கரமான வன்முறைச் செயல்: ட்ரூடோ

கனடா – ஒட்டாவா பிராந்தியத்தில் இலங்கை குடும்பத்தினர் 6 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இருந்து இடம்பெயர்ந்த இவர்கள் படுகொலை செய்யப்பட்டமையானது பயங்கரமான வன்முறைச் செயல் என்று அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”ஒட்டாவா புறநகர்ப் பகுதியான பார்ஹேவனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.

2023ல் ஒரு மில்லியன் மக்களை கொண்ட நகரமான ஒட்டாவாவில் 14 கொலைகள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில், 15 கொலைகள் நடந்துள்ளன.

இந்நிலையில் கனேடிய பொலிஸார் கொலை தொடர்பிலான விசாரணைகளை விரைவில் முன்னெடுப்பார்கள் எனவும், கொலைக்கு காரணமானவர்களை விரைவில் அடையாளம் கண்டு உரிய தீர்வு வழங்கப்படும் எனவும் கனேடிய அரசாங்கம் சார்பில் உறுதியளிப்பதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...