tamilni 121 scaled
சினிமாசெய்திகள்

திடீரென தக் லைப் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்! என்ன நடந்தது தெரியுமா?

Share

திடீரென தக் லைப் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்! என்ன நடந்தது தெரியுமா?

இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் அறிவிக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் படம் தக் லைஃப். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்தில் கமலஹாசன், திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்திலிருந்து முன்னணி நடிகர் விலகப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.

கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம், நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் படத்திற்காக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் கமல்ஹாசனின் 234வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அநேகமான நடிகர்கள் இணைந்திருக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது வெகு தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மலையாள நடிகரான துல்கர் சல்மான் தக் லைஃப் படத்தில் இணைந்திருப்பதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இவருக்கான ஆன் போர்டு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது. கால்ஷீட் பிரச்சினை மற்றும் தொடர்ந்து கமிட்டாகி இருக்கும் படங்களால் இந்த படத்திற்கு தேதிகளை ஒதுக்க முடியாததால் தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி இருப்பதாக சில தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகி உள்ளது. கூடிய விரைவில் துல்கர் சல்மான் விலகிய கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற அப்டேட்டை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...