tamilni 115 scaled
இந்தியாசெய்திகள்

செருப்பு சின்னத்தில் கூட வெற்றி பெறுவேன்: சீமான்

Share

செருப்பு சின்னத்தில் கூட வெற்றி பெறுவேன்: சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை திட்டமிட்ட செயலாக பார்க்கிறேன் என்றும், மக்களவை தேர்தலில் செருப்பு சின்னம் கொடுத்தால்கூட வெற்றி பெறுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்துள்ளேன், இன்று நீதிமன்றத்தில் வரலாம், அடுத்து உச்சநீதிமன்றம் செல்வேன்.

நான் முதலில் புலி கேட்டேன். அது தேசிய விலங்கு என்று சொன்னார்கள், அடுத்து மயில் கேட்டேன், தேசிய பறவை என்றார்கள்.

நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறோம், 7 விழுக்காடு.

எந்த சின்னமாக இருந்தாலும் போட்டியிடுவேன், சீமானின் சின்னம் என்ன என்று பார்த்து தான் வாக்களிப்பார்கள்.

செருப்பு சின்னம் கொடுத்தால் கூட நான் வெற்றி பெறுவேன், வேளாண் குடிமகன் என்பதால் கரும்பு விவசாயி சின்னத்திற்காக போராடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...

articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...