tamilni 99 scaled
சினிமாசெய்திகள்

ராதா ரவி ரொம்ப தவறான ஆளு.. அவர் இருக்கும் காம்பவுண்டுக்கு நான் போக மாட்டேன்! சின்மயி காட்டம்

Share

ராதா ரவி ரொம்ப தவறான ஆளு.. அவர் இருக்கும் காம்பவுண்டுக்கு நான் போக மாட்டேன்! சின்மயி காட்டம்

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர் சங்க தேர்தலில் தலைவராக ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்வரும் மார்ச் 17ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் ராதா ரவி பேசியுள்ளார்.

அதன்படி அவர் பேசும்போது செய்தியாளர் ஒருவர் சின்மயியை மீண்டும் யூனியனில் சேர்த்துக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்ப அதற்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார் ராதா ரவி.

அதாவது, சின்மயியை நாங்கள் வெளியே அனுப்பவில்லை. ஒவ்வொரு வருடமும் சந்தா கட்ட வேண்டும் ஆனால் அவர் கட்டவில்லை. அவ்வாறு கட்ட இல்லை என்றால் மெம்பர்ஷிப் காலாவதி ஆகிவிடும். சந்தா கட்டாததால் தனது உரிமை அவரே இழந்துவிட்டார். அவர் மீண்டும் வந்தால் சங்கத்தின் கட்டிடத்திற்கு வெளியே தான் நிக்க வேண்டும். நிச்சயமாக அவரை காண்பவுண்டில் சேர்க்க மாட்டோம் என்று காட்டமாக பேசியிருந்தார்.

இதை கேட்ட சின்மயி தனது எக்ஸ் தள பக்கத்தில், மலேசியா நாடு வழங்காத போலி டத்தோ பட்டத்தை தனக்குத்தானே ராதாரவி சூட்டிக்கொண்டார். டத்தோ வளாகம் என்று பெயரிடப்பட்ட டப்பிங் ஜூனியர் காம்பவுண்ட் அந்த கட்டிடத்தையே சட்டத்திற்கு புறம்பானது என சென்னை மாநகராட்சி சீல் வைத்து தரைமட்டம் ஆக்கியதாக கூறியுள்ளார்.

மேலும், யூனியன் உறுப்பினர்களின் உழைப்பில் இருந்த எடுத்த காசு மண்ணோடு மண்ணா போச்சு. ராதாரவி போன்ற தவறான நபர்கள் இருக்கும் இடத்திற்கு நான் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என கடுமையாக விளாத்தி தள்ளியுள்ளார் சின்மயி.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...