tamilni 73 scaled
இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையானவர்களுக்காக புதிதாக புனர்வாழ்வு நிலையங்கள்

Share

போதைக்கு அடிமையானவர்களுக்காக புதிதாக புனர்வாழ்வு நிலையங்கள்

போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க, இஸ்லாமிய, இந்து மத குருமார்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் போதைப்பொருளுக்கு அடிமையான 50 பேரை ஒரு மையத்தில் தங்க வைக்கும் மையங்கள் நிறுவப்படும்.

போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீள்வதே புதிய வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கண்டியில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளார்.

நாட்டில் 100,000 பேர் அனைத்து விதமான போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி உள்ளதாகவும், ஆனால் வருடாந்தம் 4700 பேர் புனர்வாழ்வளிக்கப்படுவதாகத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அது நியாயமானதல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கந்தகாடு மையத்தில் நடந்ததைப் போன்று முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...