tamilni 63 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் மறைந்திருந்த 2ம் உலகப் போர் கால ரகசிய சுரங்கம்

Share

பிரித்தானிய பெண்மணி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டாம் உலகப் போர் கால குண்டு தங்குமிடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள கென்ட்(Kent) மாகாணத்தின் ஃபோக்ஸ்டோன்(Folkestone) அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ரெபேக்கா ஹாப்சன்(Rebecca Hobson) என்ற பெண்மணி, தனது வீட்டின் பின்புற தோட்டத்தில் இரண்டாம் உலகப் போர் கால குண்டு தங்குமிடம்(World War II-era bomb shelter) ஒன்றை கண்டுபிடித்து அதிசயித்தார்.

ரெபேக்கா வீட்டின் தோட்டத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்து எஞ்சியிருக்கும் குண்டு தங்குமிடம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த ஆண்டு வரை அதை ஆராயமாக இருந்த ரெபேக்கா ஹாப்சன், தனது துணைவர் டாரன் உடன் இணைந்து இந்த தகவலை ஆராய முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து தோட்டத்தின் பின்புறத்தில் இருந்த கல் ஒன்றை தூக்கி மண்ணுக்குள் மறைந்திருந்த பாதையின் நுழைவாயைக் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அந்த சுரங்கப்பாதை 160 அடி நீளமுள்ள ஒரு பிரமிக்க வைக்கும் சுரங்கப்பாதை என்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

சுரங்கப்பாதையை ஆராய்ச்சி செய்தபோது, கட்டமைப்பு மட்டுமல்லாமல், கடந்த காலத்தின் சான்றுகளையும் அவர்கள் கண்டறிந்தனர்.

உள்ளே கிடைத்த பழைய செய்தித்தாள் துண்டுகள், இந்தத் தங்குமிடம் சுமார் 200 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புகலிடமாக இருந்ததையும், இரண்டாம் உலகப் போரின் போது கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக தன்னார்வ தொண்டர்களால் கட்டப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தின.

ரெபேக்காவின் இந்தக் கண்டுபிடிப்பு, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Share
தொடர்புடையது
15
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: ஏப்ரலுக்குப் பிறகாவது நீதி உறுதி – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வாக்குறுதி!

2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்போதைய...

14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரண தண்டனை அமுலாகுமா? – அமைச்சரவை இன்னும் தீர்மானிக்கவில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!

இலங்கையில் தூக்குத் தண்டனை உள்ளிட்ட மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித...

13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கச்சதீவு திருவிழா பிப்ரவரி 27-இல் கொடியேற்றம்! – 8,000 பக்தர்கள் பங்கேற்க விரிவான ஏற்பாடு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

12
செய்திகள்அரசியல்இலங்கை

ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் நிகழ்வுகள் ரத்து: ஜனநாயகம் அடக்கப்பட்டுவிட்டது – அலி சப்ரி கடும் விசனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிரித்தானியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford Union)...