tamilnaadi 19 scaled
இலங்கைசெய்திகள்

பிரதமரின் உலங்குவானூர்தி பயணத்தினால் மாத்தறையில் குழப்பம்

Share

பிரதமரின் உலங்குவானூர்தி பயணத்தினால் மாத்தறையில் குழப்பம்

பிரதமர் தினேஸ் குணவர்தன பயணித்த உலங்குவானூர்தி மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட தவறினால் மாத்தறை விடுதியின் கூரை மற்றும் உணவு பானங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மாலின் இறுதிச் சடங்கிற்கு பிரதமர் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடலில் இருந்து பலத்த காற்று வீசியதால் இந்த நிலை ஏற்பட்டதாக மாத்தறை விடுதியின் முகாமையாளர் விளக்கமளித்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது, ​​உணவு, பானங்கள் பெற்றுக்கொண்டிருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் மீது மணல், தூசி, குப்பைகள் விழுந்து பெரும் சிரமத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், உலங்குவானூர்தி சரியான முறையில் தரையிறக்கப்படாமைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இறுதிச் சடங்குகள் பல முக்கியஸ்தர்கள் வரவிருந்ததால், மாத்தறை பகுதியை விரைவாக சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், உலங்குவானூர்தியிலிருந்து பத்திரமாக தரையிறங்கிய பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன இறுதி சடங்கிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் மாத்தறை விடுதிக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக மாத்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரொஷான் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...