tamilni 9 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு

Share

இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு

இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கள் நடத்தத் தயாராக உள்ளதாக தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று(28) வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட கடற்றொழிலாளர்கள் நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பிலான இரு நாட்டு அரசுகளதும் பேச்சுக்கள் முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம்(27) தமிழ்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் தொலைபேசியில் பேசியிருந்தார்.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றார் அத்தோடு செவ்வாய் மாலை தாங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் ஊடாக பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் எனக்கு கூறப்பட்டது.

அதேநேரத்தில், என்னையும் அந்தக் கலந்துரையாடலுக்கு நேரில் அல்லது தொலைபேசியில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு நான் அதற்கு இணங்கியுள்ளேன்.

எனக்கு அவர்கள் உத்தரவாதம் தரவேண்டும் அத்தோடு அவர்களின் இழுவை மடிப்படகுகள் எங்கள் கடலுக்குள் வந்து வளங்களை சுரண்டுகின்ற மற்றும் அழிக்கின்ற எங்கள் கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவாதத்தினை தருவார்களாக இருந்தால் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு தயாராக இருக்கின்றேன் இதுதான் பேச்சுக்கான அடிப்படை” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...