tamilni 582 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்!

Share

வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்!

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க வேட்பாளாராக களமிறங்க மாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆதரவற்றவர் எனவும் இதனை அவர் நன்கு அறிந்திருப்பதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சார நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளையும் தனது கட்சி முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மக்கள் ஆதரவற்ற தற்போதைய ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தான் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும், இது கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்து அல்ல எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...