tamilni 582 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்!

Share

வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்!

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க வேட்பாளாராக களமிறங்க மாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆதரவற்றவர் எனவும் இதனை அவர் நன்கு அறிந்திருப்பதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சார நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளையும் தனது கட்சி முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மக்கள் ஆதரவற்ற தற்போதைய ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தான் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும், இது கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்து அல்ல எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...