tamilni Recovered 19 scaled
சினிமாசெய்திகள்

‘தளபதி 69’ இயக்குனர் பட்டியலில் புதிதாக இணைந்த இயக்குனர்.. ஜெயம் ரவியால் நடந்த சோகம்.

Share

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு இயக்குனர் இணைந்ததாகவும் ஆனால் ஜெயம் ரவியால் அந்த வாய்ப்பு பறிபோனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் தனது கடைசி படம் ஒரு காரசாரமான அரசியல் கதையம்சம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விஜய் விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ், எச் வினோத், வெற்றிமாறன், அட்லி உள்பட ஒரு சில இயக்குனர்கள் விஜய் இடம் கதை கூறி இருப்பதாகவும் இருப்பினும் இன்னும் ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் யார் என்பதை விஜய் முடிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தளபதி 69’ இயக்குனர் பட்டியலில் சமீபத்தில் அந்தோணி பாக்யராஜ் இணைந்துள்ளார். அவர் கூறிய ஒரு அட்டகாசமான அரசியல் கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி சொல்கிறேன் என்று விஜய் அவரிடம் கூறியதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ’சைரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் சில காட்சிகளை ஜெயம் ரவி வலுக்கட்டாயமாக மாற்றியதாகவும் அதனால் தான் இந்த படம் தோல்வி அடைந்ததாகவும் அந்தோணி பாக்யராஜ் தரப்பில் கூறியுள்ள நிலையில் இந்த படத்தின் தோல்வி காரணமாக ’தளபதி 69’ படத்தின் வாய்ப்பு தனக்கு கிடைக்கப் போவதில்லை என்று புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ’தளபதி 69’ வாய்ப்பை ஜெயம் ரவியால் இழந்தேன் என்று அவர் தனது நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...