tamilni 488 scaled
இலங்கைசெய்திகள்

ஏமனின் ஹவுதிகளை அடக்க முடியாமல் திணறும் வல்லரசு நாடு

Share

ஏமனில் ஹவுதிகள் மீது தொடர்ந்து ஐந்து வாரங்களாக தாக்குதல் முன்னெடுத்தும், அமெரிக்காவால் ஹவுதிகளை அடக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா வழியாக செல்லும் வணிக மற்றும் சர்வதேச கப்பல்களை ஹவுதிகள் தொடர்ந்து குறிவைத்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் MQ-9 Reaper ட்ரோன் ஒன்றையும், அமெரிக்காவுக்கு சொந்தமாக இரு வணிக கப்பல்களையும், அமெரிக்க போர் கப்பல் ஒன்றின் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜனவரி 11ம் திகதியில் இருந்து ஹவுதிகள் மீது 32 தற்காப்பு தாக்குதல்களை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. ஆனால் அந்த தாக்குதல்களால் ஹவுதிகளை அமெரிக்காவால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இதனிடையே, ஹவுதிகளை தீவிரவாத அமைப்பு என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் பொருளாதார உதவிகள் இன்றி, ஹவுதிகள் தாக்குதல்களை குறைத்துக் கொள்வார்கள் என அமெரிக்கா நம்புகிறது.

ஆனால், காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை தங்கள் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என அவுதிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஹவுதிகள் தாக்குதல்களை நிறுத்தும் வரை அமெரிக்க இராணுவம் அவர்களின் இலக்குகளைத் தாக்கும் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது..

Share

Recent Posts

தொடர்புடையது
25 6823d086c8e1c
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

தமிழரசுக்கட்சியை அழித்தவரே வெளியில் இருந்து அமைச்சர்களைப் பதவி விலகக் கோருவது கேலிக்கூத்து’ – எம்.பி. இளங்குமரன் ஆவேசம்!

தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களைப்...

MediaFile 2 5
இலங்கைபிராந்தியம்

மன்னாரில் தேசிய நீர் வழங்கல் சபையின் விசேட முகாம்: பெரிய கரிசல் கிராமத்தில் ஒரே நாளில் புதிய இணைப்புச் சேவை!

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய...

images 2 9
செய்திகள்இலங்கை

நாளை மிரிஹானை பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து மாற்றம்: மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தல்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (நவம்பர் 21) நண்பகல் நடைபெறவுள்ள...

japan sri lanka flags
செய்திகள்இலங்கை

5000 ஜப்பானிய மொழிப் பயிற்சியாளர்கள்: இலங்கையில் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டம்!

2026ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை...