tamilnih 19 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை தோல்வியைக் கண்டு சிரிக்கும் புடின்

Share

பிரித்தானியா நடத்திய அணு ஆயுத சோதனை தோல்வியில் முடிந்துள்ளதால், அது பிரித்தானியாவுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கடற்படையிலுள்ள HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து, Trident 2 என்னும் அந்த அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்ட நிலையில், அந்த ஏவுகணை சிறிது தூரத்திலேயே கடலில் விழுந்துவிட்டது.

2016ஆம் ஆண்டு, இதேபோல ஒரு அணு ஆயுத சோதனையை பிரித்தானியா நடத்த, அது தோல்வியில் முடிந்தது. ஆகவே, இரண்டாவது முறை அந்த சோதனையை பிரித்தானியா நடத்தும்போது எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்று கூறியிருந்தார் பக்கிங்காம் பல்கலை பேராசிரியரான Anthony Glees என்பவர்.

அத்துடன், பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை வெற்றிபெற்றால், ரஷ்ய ஜனாதிபதி புடின் அது குறித்து பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளமாட்டார் என்று கூறிய பேராசிரியர் Anthony Glees, அதே நேரத்தில், அந்த சோதனை 2016ஆம் ஆண்டு நடந்ததைபோல தோல்வியில் முடிந்ததானால் அவ்வளவுதான், புடின் சத்தமாக சிரிக்கப்போகிறார். அதனால், கிரெம்ளின் மாளிகையே அதிரப்போகிறது என்று கூறியிருந்தார். ஆகவே, இந்த முறையாவது சொதப்பாமல் ஒழுங்காக அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார் பேராசிரியர் Anthony Glees.

அவர் எச்சரித்ததுபோலவே, அணு ஆயுத சோதனை தோல்வியில் முடிந்துவிட்டது. இந்நிலையில், பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை தோல்வியில் முடிந்ததைக் கண்டு புடின் சிரிக்கிறார் என்று கூறியுள்ளார் பேராசிரியர் Anthony Glees.

இது பிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் தலைக்குனிவு என்று கூறியுள்ள அவர், கடற்படைத் தலைமை இதற்கு விளக்கமளிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

குறிப்பாக, இஸ்ரேல் காசா போர், ரஷ்யா உக்ரைன் போர் என உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், இப்படி நடந்துள்ளது மிகவும் கவலையை அளிக்கிறது என்கிறார் பேராசிரியர் Anthony Glees.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...