tamilni 477 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Share

இலங்கையிலுள்ள பல மாவட்டங்களில் இன்றைய தினம் (22.02.2024) இயல்பை விட அதிகமாக வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை காணப்படும் என்பதால் வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும், அதிக நீரை பருகுமாறும், வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் வயது வந்தோர் 3 லீட்டர் நீரையும், சிறுவர்கள் ஒன்றரை லீட்டர் நீரையும் குடிப்பது மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நீருக்கு மேலதிகமாக தர்பூசணி, தோடம்பழம் போன்ற நீர் சத்துக்களை கொண்ட பழங்களை சாப்பிடுவதும் மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பம் மற்றும் சூரிய ஒளி அதிகமாக இருக்கும் போது வெளியே செல்வதனை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

வேலைக்குச் செல்வோர் அதிக தண்ணீர் எடுத்துச் செல்வது மிகவும் பொருத்தமானது என மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63% ஆக அதிகரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மின் தேவை அதிகரித்து வருவதால் நீர்த்தேக்கங்களில் நீர் நிலைகளை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...