tamilni Recovered Recovered 7 scaled
சினிமாசெய்திகள்

கூவத்தூரில் பிரபல தமிழ் நடிகைகள் விருந்தாக்கப்பட்டார்களா? ஆவேசம் அடைந்த சீரியல் நடிகை..!

Share

கூவத்தூரில் பிரபல தமிழ் நடிகைகள் விருந்தாக்கப்பட்டார்களா? ஆவேசம் அடைந்த சீரியல் நடிகை..!

கூவத்தூரில் பிரபல தமிழ் நடிகைகள் விருந்தாக்கப்பட்டார்கள் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் பேட்டி அளித்திருந்த நிலையில் அவரது பேட்டிக்கு தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது பிரபல நடிகைகள் அங்கிருந்த எம்எல்ஏக்களுக்கு விருந்தாக்கப்பட்டார்கள் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜு என்பவர் இன்று பேட்டி அளித்துள்ளார்.

குறிப்பாக அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் என்பவர் ஒரு குறிப்பிட்ட நடிகை மட்டுமே வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு நடிகர் கருணாஸ் தான் ஏற்பாடு செய்ததாகவும், இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி தான் செலவு செய்ததாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் என்னென்ன கூத்தாடித்தார்கள்? எந்தெந்த நடிகைகள் அங்கு வந்தார்கள்? யார் யாரெல்லாம் விருந்தாக்கப்பட்டார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும் ஆனால் அதற்கெல்லாம் ஆதாரம் இல்லை என்றாலும் இது எல்லாம் நடந்தது உண்மை என்றும் அவர் கூறினார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜு அவர்களின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபல சீரியல் நடிகையும், மருத்துவருமான ஷர்மிளா தனது சமூக வலைத்தளத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கூவத்தூர் ரிசார்ட் முன் ஏராளமான ஊடகங்கள் கேமராவை வைத்துக் கொண்டிருந்த நிலையில் எப்படி அங்கு நடிகைகளை அங்கு அழைத்துச் செல்ல முடியும்? இது எப்படி சாத்தியம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனது தனிப்பட்ட பகைக்காக சினிமாவில் உள்ள பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...