1 8 scaled
ஏனையவை

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி அவதூறு பேச்சு! அதிமுக முன்னாள் செயலாளரை கைது செய்ய வேண்டும் – நடிகர் சேரன்

Share

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி அவதூறு பேச்சு! அதிமுக முன்னாள் செயலாளரை கைது செய்ய வேண்டும் – நடிகர் சேரன்

அதிமுக கட்சியின் சேலம் ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசியலில் கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் பெரும் புயலை கிளப்பிய சம்பவம் ஆகும். தற்போது இந்த சம்பவம் தொடர்பில் நடிகை திரிஷாவை இணைத்து அதிமுக முன்னாள் பிரமுகர் பேட்டி அளித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

சேலம் ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், பல கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக சொத்து சேர்த்து இருப்பதாக கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் ஏ.வி.ராஜு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ரகசியங்களை அடுக்கினார்.

அவர் எம்.எல்.ஏ. வெங்கடாலசம் குறித்து பேசியபோது நடிகை திரிஷாவை அவர் கேட்டதாகவும், அதற்கு நடிகர் கருணாஸ் ஏற்பாடு செய்ததாகவும் பகிரங்கமாக கூறினார்.

அத்துடன் 25 லட்சம் அதற்காக செலவானதாகவும், எடப்பாடி பழனிசாமி தான இதற்கெல்லாம் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து நடிகர் சேரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் ஏ.வி.ராஜுவை கைது செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...