tamilni 409 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்ட தைவான் காதல் ஜோடிகள்!

Share

தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்ட தைவான் காதல் ஜோடிகள்!

தைவான் நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் இந்து முறைப்படி தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டமான மயிலாடுதுறை, சீர்காழி அருகே கரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.

இந்நிலையில் நேற்று, இங்கு தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் யோங்சென் (36), ஆசிரியை ருச்சென் (30) ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தங்களது நாட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் இவர்கள் இந்துமுறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

அதற்காக சீர்காழிக்கு வந்த அவர்களுக்கு ஒளிலாயம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மணப்பெண் ருச்சென் பட்டுச்சேலை, மாலை அணிந்தும், மணமகன் யோங்சென் பட்டு வேட்டி, மாலை அணிந்தும் மணமேடைக்கு வந்தனர்.

அங்கு மணமேடையில் யாகம் வளா்க்கப்பட்டு தமிழ் முறைப்படி மந்திரங்கள் கூற மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னா் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். அவர்களுக்கு, நண்பர்கள் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...