tamilni 393 scaled
சினிமாசெய்திகள்

ஜெயம் ரவியின் சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Share

ஜெயம் ரவியின் சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்யின் சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் சைரன். ரிவென்ஜ் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏற்கனவே கோமாளி படத்தில் ஹிட் காம்போ என நிரூபித்த ஜெயம் ரவி – யோகி பாபு கூட்டணி இப்படத்தில் இணைந்தது.

மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்நிலையில், சைரன் படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

எதிர்பார்த்ததை விட இது குறைவான வசூல் தான் என திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இனி வரும் நாட்களில் சைரன் திரைப்படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்று.

 

Share
தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...