1 7 scaled
உலகம்செய்திகள்

போர்க்களம் நேரிடையாக பார்த்ததுண்டா… டொனால்டு ட்ரம்புக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்

Share

போர்க்களம் நேரிடையாக பார்த்ததுண்டா… டொனால்டு ட்ரம்புக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்

நீண்ட நான்கு மாதங்கள் கடுமையான மோதலுக்கு பிறகு, கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள Avdiivka பகுதியில் இருந்து வெளியேறுவதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

குறித்த தகவலை சனிக்கிழமை ராணூவத் தளபதி தெரிவித்துள்ளார். முற்றுகையிடப்பட்ட இந்த நகரமானது பல மாதங்களாக ரஷ்யாவின் தாக்குதல் முயற்சிகளின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது.

தற்போது போரின் இரண்டாவது ஆண்டு வெற்றிவிழாவினைக் கொண்டாடவிருக்கும் ரஷ்யாவுக்கு இது ஊக்கமாக அமையும் என்றே கூறப்படுகிறது. Avdiivka பகுதியில் இருந்து வெளியேறுவது தங்கள் ராணுவ வீரர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என உக்ரைன் தளபதி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எங்கள் வீரர்கள் தங்கள் இராணுவக் கடமையை கண்ணியத்துடன் நிறைவேற்றினர் என்றும், சிறந்த ரஷ்ய இராணுவப் பிரிவுகளை அழிக்க முடிந்த அனைத்தையும் செய்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உரிய ஆயுதங்கள் இன்றி ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்வது கடினம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார். மேலும், போர்க்களத்தில் நேரிடையாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை அழைத்துச் செல்ல ஆசைப்படுவதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு நிதி அளிப்பது தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் தமது எதிர்ப்பை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையிலேயே உண்மையான போர் என்பது எப்படி இருக்கும் என்பதை டொனால்டு ட்ரம்ப் நேரிடையாக பார்க்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...