24 65d079170e7d3 md
உலகம்செய்திகள்

முறைகேடு குற்றச்சாட்டினால் தப்பியோட்டம்! நாடு திரும்பியதும் சிறை..விடுதலையாகும் முன்னாள் பிரதமர்

Share

முறைகேடு குற்றச்சாட்டினால் தப்பியோட்டம்! நாடு திரும்பியதும் சிறை..விடுதலையாகும் முன்னாள் பிரதமர்

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நாளை சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்த காலத்தில் தக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra), ஆட்சிக்காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறை செல்வோம் என பயந்து தக்சின் ஷினவத்ரா (74) வெளிநாட்டில் தஞ்சமடைந்தார். ஆனால் அவர் மீண்டும் நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஆகத்து மாதம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

காசா எல்லையில் எகிப்தின் புதிய சுவர்., செயற்கைக்கோள் படங்கள் அம்பலம்
காசா எல்லையில் எகிப்தின் புதிய சுவர்., செயற்கைக்கோள் படங்கள் அம்பலம்
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், தாய்லாந்து மன்னர் Maha Vajiralongkorn அவரது சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்தார்.

இதற்கிடையில் தக்சின் உடல்நலக்குறைவு காரணமாக பாங்காக் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் தற்போதைய தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin), நாளை தக்சின் ஷினவத்ரா விடுதலை செய்யப்படுவார் என அறிவித்துள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...