tamilnih 13 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி

Share

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி

பேருவளையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் போது சுமார் நான்கு மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் காசாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயாகல, ஹல்கந்தவில, துவாகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை, அம்பேபிட்டியகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2023.06.09 முதல் 2024.02.06 வரை இந்த மோசடி நடந்துள்ளது, மேலும் 12 ஊழியர்கள் நிறுவனத்தில் பணி புரிகின்றனர்.

கடையின் கணினி அமைப்பு மற்றும் பாதுகாப்பு கமரா அமைப்பை ஆய்வு செய்த போது, பணத்திற்கும் வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.​​ வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய 1475 பட்டியல்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை இதன்போது தெரிய வந்துள்ளது.

இந்தப் பணத்தை பட்டியல்கள் கணினி கட்டமைப்பில் பதிவு செய்து ஏமாற்றியதாக முறைப்பாட்டாளர் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...