tamilni 310 scaled
இலங்கைசெய்திகள்

சந்திரிக்கா பற்றிய அரசியல் செய்திகள் ஆதாரமற்றவை

Share

சந்திரிக்கா பற்றிய அரசியல் செய்திகள் ஆதாரமற்றவை

சந்திரிகா தொடர்பில் இந்நாட்களில் வெளிவரும் அரசியல் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அவரது அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தரப்புக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அண்மையில் வெளிவந்த செய்திகளை மறுத்துள்ள அவர், தாம் இதுவரையில் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவு வழங்கவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறிப்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுஜன முன்னனி கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளையும் மறுத்துள்ளார்.

இந்நிலையில்,இந்த ஆண்டு இறுதியில் இலங்கை முக்கியமான தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் உச்சகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இந்த அறிவிப்பை சந்திரிக்கா விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் எதுவும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்பதை தம்மால் கூற முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...