tamilni 244 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

சீமான் தாடி வளர்க்க காரணம் என்ன? பிரபல இயக்குநர் சொன்ன அந்த வார்த்தை

Share

சீமான் தாடி வளர்க்க காரணம் என்ன? பிரபல இயக்குநர் சொன்ன அந்த வார்த்தை

சமீப காலமாக சீமான் தாடி வளர்ப்பதற்கான காரணத்தை தற்போது அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் அரசியல் தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பான ஆலோசனை போன்றவற்றால் பிசியாக உள்ளனர்.

ஆனால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக தாடி வளர்த்து புதிய கெட்டப்பில் உள்ளார். அதாவது எப்போதும் அவர் பிட்டாகவே இருப்பார். மொத்தமாக ஷேவ் செய்து, முடியை குறைவாக வைத்திருப்பார்.

ஆனால் அவர் தற்போது, தாடி வைத்து, உடல் எடை கூடி அவரது தோற்றமே முழுவதுமாக மாறியுள்ளது. இவரது மாற்றதிற்கு என்ன காரணம் என்று இணையத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், தான் ஏன் தாடி வளர்க்கிறேன் என்று தனியார் சேனல் ஒன்றிற்கு சீமான் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “ஒரு படத்தில் நடிக்க வேண்டியுள்ளது. இன்னும் அந்த படத்திற்கு பெயர் வைக்கவில்லை. இயக்குநர் விக்னேஷ் சிவன் கேட்டுக்கொண்டதால் ஒப்புக்கொண்டேன்.

இதுவரை பார்க்காத தோற்றத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். தாடி வளர்க்க வேண்டும் என்று கூறினார். அதற்காக வளர்க்கிறேன்” என்றார்.

சினிமாவில் சீமான் நடித்தும்,படங்களை இயக்கியும் பல வருடங்கள் ஆன நிலையில் அவர் தனது தோற்றத்தை மாற்றி ரீஎன்ட்ரி கொடுக்கிறார் என்று பேசப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...