tamilni 231 scaled
உலகம்செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது தெரியும்: மௌனம் கலைத்த மன்னர் சார்லஸ்

Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது தெரியும்: மௌனம் கலைத்த மன்னர் சார்லஸ்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது புற்றுநோயைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

75 வயதான மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது அரச குடும்பத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனை மன்னர் சிகிச்சையில் ஈடுபடுவதற்காக சில அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

இந்த நிலையில் புற்றுநோய் கண்டறிதலுக்கு பின் முதல் முறையாக மன்னர் சார்லஸ் பொதுக் கருத்தை தெரிவித்துள்ளார்.

தனது நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்து அவர் தனது அறிக்கையில், ”சமீபத்திய நாட்களில் நான் பெற்ற பல ஆதரவு மற்றும் நல்ல வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரியும், இதுபோன்ற அன்பான எண்ணங்கள் மிகப்பெரிய ஆறுதல் மற்றும் ஊக்கம் என்று” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரித்தானியா மற்றும் பிற இடங்களில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகளின் மீது ஒரு ஒளியைப் பிரகாசிக்க, அவரது நோயறிதல் எவ்வாறு உதவியது என்பதைக் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...