tamilni 208 scaled
உலகம்செய்திகள்

போர் மற்றும் தடைகளுக்கு மத்தியில் அசுர வளர்ச்சி காணும் ரஷ்யா: தடுமாறும் எஞ்சிய G7 நாடுகள்

Share

போர் மற்றும் தடைகளுக்கு மத்தியில் அசுர வளர்ச்சி காணும் ரஷ்யா: தடுமாறும் எஞ்சிய G7 நாடுகள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைன் மீதான போர் நீடித்துவரும் நிலையிலும் ரஷ்யாவின் பொருளாதாரம் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான திடீர் போருக்கு பின்னர் ரஷ்யா மீது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன், ஏற்றுமதிக்கும் வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கின.

ஐரோப்பாவிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பிடித்துவந்த ஜேர்மனி, தற்போது கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புடின் தவறிழைத்திருந்தாலும், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பெல்ஜியம் தலைவர்களும் இன்னொருவகையில் தவறிழைத்துள்ளதாகவே நிபுணர்கள் தரப்பின் வாதமாக உள்ளது.

ரஷ்யாவின் பொருளாதாரத்தை மொத்தமாக சீர்குலைக்க முடியும் என்று நம்பி கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்த ஜோ பைடன் மற்றும் அவரது ஆதரவு தலைவர்கள், உக்ரைனுக்கு வாரி வழங்கினர்.

உக்ரைன் மீது படையெடுக்கும் முன்னரே பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா தயாராகி வந்ததாகவே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து குறைவான கட்டணத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. ரஷ்ய மின்சாரம் மற்றும் எரிவாயு இன்றி ஜேர்மனி தற்போதும் தடுமாறி வருகிறது.

ஆனால் ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து, பலர் ரஷ்யாவை நாடினர். பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் குறிப்பிட்ட மூலப் பொருட்களுக்கு ரஷ்யாவையே தற்போதும் நம்பியுள்ளது.

மேலும், உக்ரைன் போரினால் சராசரி ரஷ்ய மக்கள் நேரிடையாக பாதிக்கப்படாத வகையில் புடின் பார்த்துக்கொண்டுள்ளார். ராணுவ தளவாட உற்பத்தியால், ரஷ்யா தனது பொருளாதாரத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக தூக்கி நிறுத்தியுள்ளதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உண்மையில் ரஷ்யாவை பாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் மின்சாரம், எரிவாயு என ரஷ்யாவை நம்பியிருந்த பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...