இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் வருமானம் 25 வீதத்தினால் அதிகரிப்பு

Share
tamilni 180 scaled
Share

அரசாங்கத்தின் வருமானம் 25 வீதத்தினால் அதிகரிப்பு

கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு வருமானம் அதிகரித்துள்ளது.

219 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 274 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 11 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும்,மதுவரித் திணைக்களத்தின் வருமானமும் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 114 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனவே அரசாங்க வருமான அதிகரிப்பானது நாட்டு பிரஜைகளின் நலனை மேம்படுத்தும் என அமைச்சர் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...