5 scaled
இந்தியாசெய்திகள்

கட்சியின் முதல் கூட்டத்தில் வீடியோ காலில் பேசிய நடிகர் விஜய்.., அவர் போட்ட உத்தரவு என்ன?

Share

கட்சியின் முதல் கூட்டத்தில் வீடியோ காலில் பேசிய நடிகர் விஜய்.., அவர் போட்ட உத்தரவு என்ன?

கிராமத்தில் உள்ள 80 வயது உள்ளவர்களுக்கும் நம் கட்சி பெயர் தெரிய வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டார்.

குறிப்பாக அவர் தனது அறிக்கையில், “வரும் 2026 சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு” என்று கூறியுள்ளார்.

கட்சி தொடங்கிய பின்பு முதல் கூட்டம் நேற்று பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளாவில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கட்சி கூட்டத்தை புஸ்ஸி ஆனந்த் ஒருங்கிணைத்துள்ளார். நடிகர் விஜய் கட்சி கூட்டத்தில் நேரிடையாக கலந்து கொள்ளாமல் வீடியோ கால் மூலமாக 5 நிமிடம் நிர்வாகிகளிடம் உரையாடினார்.

அப்போது அவர், “பொது மக்களுடைய பிரச்சனையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எதிர்வரும் பிரச்சனைகளை நாம் புன்னகையோடு எதிர்கொள்ள வேண்டும். இடையூறுகளும், விமர்சனங்களும் வந்தால் இன்முகத்தோடு கடந்து செல்லுங்கள்.

2024 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சி பணி தீவிரமடையும். குக்கிராமங்களில் உள்ள 80 வயது உள்ளவர்களுக்கும் நமது கட்சியின் பெயர் தெரிய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
26 6956109675232
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர வெடிவிபத்து: பலர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) நகரில் உள்ள ஒரு பாரில் (Bar) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கிப்...

WhatsApp Image 2025 07 30 at 10.13.14 1
இலங்கைஅரசியல்செய்திகள்

குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வலியுறுத்தல்!

வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில்...

MediaFile 5
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள்: CID தீவிர விசாரணை என அரசாங்கம் தகவல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்து குற்றப்...

feeffef8b9eb82ce9b06f1c9550878a1460042ec
செய்திகள்அரசியல்இலங்கை

வரி ஏய்ப்பாளர்களுக்கு ஜனாதிபதியின் கடும் எச்சரிக்கை: வாகன இறக்குமதியை நிறுத்த முடியாது!

இலங்கையில் வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது தராதரம் பாராது...