tamilni 42 scaled
இலங்கைசெய்திகள்

வாகன விபத்தில் சிக்கி தம்பதியினர் பலி

Share

வாகன விபத்தில் சிக்கி தம்பதியினர் பலி

கண்டி, தலத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தண்ணேகும்புரவில் இருந்து ராகலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ராகலையிலிருந்து தண்ணேகும்பு நோக்கிச் சென்ற வானுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மெதிரிகிரிய பிரதேசத்தில் வசிக்கும் 68 மற்றும் 62 வயதுடைய கணவன் மனைவியரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...