tamilni 40 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்

Share

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்]

எரிபொருள் கூட்டுத்தாபனமும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறவிடப்படும் 18 வீத வற் வரியை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரியை குறைக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூட வேண்டிவரும் எனவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

எரிபொருள் விற்பனையில் மூன்று சதவீதத்திற்கும் குறைவான கமிஷன் பெறுவதாகவும், அந்த கமிஷனில் 18 சதவீதத்தை வற் ஆக செலுத்த வேண்டும் என்றும் சங்கம் கூறுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இந்த தொகையில் ஊழியர் சம்பளம், மின் கட்டணம், பராமரிப்புப் பணிகளுக்கான பணம் ஆகியவற்றை ஒதுக்கிய பின்னர், இந்த தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...