tamilnaadi 23 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி

Share

இலங்கை வந்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த 25 வயதுடைய அமெரிக்க பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடம் இருந்த 6000 டொலர் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் பெண் நானுஓயா பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி கண்டியில் உள்ள தங்குமிடமொன்றில் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி கண்டியில் இருந்து பதுளைக்கு ரயிலில் பயணித்த இந்த பெண் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட சிலர் நானுஓயா பொலிஸாரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

2400 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க வளையல், 3600 அமெரிக்க டொலர் பெறுமதியான சங்கிலி, வைரம் பதித்த இரண்டு காதணிகள் என்பன திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் சட்ட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்த பெண் சட்ட வைத்தியரிடம் பரிசோதனைக்குட்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், அவர் ஆஜராக மறுத்துவிட்டார்.

கண்டியில் உள்ள விடுதி ஒன்றில் சுற்றுலா வழிகாட்டி மற்றும் மற்றுமொரு நபருடன் மது அருந்தியதாகவும், இடையில் நடந்த எதுவும் தனக்கு ஞாபகம் இல்லை எனவும் பொலிஸாரிடம் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...