உலகம்செய்திகள்

புலம்பெயர் மக்களின் மரணம்… ஐரோப்பிய நாடொன்றிற்கு எதிராக ஐ.நாவிடம் அகதி ஒருவர் புகார்

Share

புலம்பெயர் மக்களின் மரணம்… ஐரோப்பிய நாடொன்றிற்கு எதிராக ஐ.நாவிடம் அகதி ஒருவர் புகார்

புலம்பெயர் மக்கள் விவகாரத்தில் ஸ்பெயின் அரசாங்கம் அனைத்து விதிகளையும் மீறியுள்ளதாக கூறி 25 வயதேயான அகதி ஒருவர் ஐ.நாவிடம் புகார் அளித்துள்ளார்.

2014ல் மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்றபோது குறைந்தது 15 பேர் இறந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மொராக்கோ நாட்டவரான அந்த 25 வயது நபர் தெரிவிக்கையில், ஒரு தசாப்தம் கடந்துவிட்டது, இன்னும் பலரின் இறப்பு மற்றும் காயங்களுக்கு ஒரு நபர் கூட பொறுப்பேற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மூன்று நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் அல்லது உயிர் தப்பியவர்கள் என எவரிடமும் தங்கள் கருத்தினை விசாரணை அதிகாரிகள் பெறவில்லை என்றே அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அன்று எல்லையில் நடந்த வன்முறை நீதிமன்றத்தில் தொடர்ந்தது, அங்கும் எங்களை மனிதர்களாக நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொராக்கோவில் இருந்து ஸ்பானியப் பகுதியான சியூட்டாவுக்குச் செல்ல முயன்ற சுமார் 200 பேருடன் அவர் இணைந்தபோது அவருக்கு 15 வயது.

சுமார் 18 மாதங்கள் உதவ எவருமின்றி, எந்த ஆவணங்களும் இன்றி மிகக் கடுமையான வாழ்க்கையை அந்த ஆப்பிரிக்க நாட்டில் வாழ்ந்ததாகவும், அதன் பின்னரே ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சம்பவத்தன்று ஸ்பெயின் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 பேர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயங்களுடன் தப்பினர். 2019ல் ஏற்கனவே இருமுறை விசாரணைக்கு பின்னர், 16 பொலிசார் மீது நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.

இதனிடையே, அந்த மொராக்கோ இளைஞர் ஜேர்மனியில் குடியேறியதுடன், அங்குள்ள அரசாங்கம் அடைக்கலம் அளிக்கவும் உறுதி அளித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் ECCHR ஆதரவுடன் ஐ.நாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...