tamilni 500 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவின் விபத்தில் சிக்கிய மூன்றாவது வாகன சாரதியின் வாக்குமூலத்தில் சிக்கல்

Share

சனத் நிஷாந்தவின் விபத்தில் சிக்கிய மூன்றாவது வாகன சாரதியின் வாக்குமூலத்தில் சிக்கல்

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது வாகனம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விபத்துக்குள்ளான இரு வாகனங்களின் சாரதிகளும் மூன்றாவது வாகனத்தை குறிப்பிட்டுள்ளதால், நெடுஞ்சாலைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிவேகம், மோசமான தெரு விளக்குகள், கவனக்குறைவு மற்றும் மூன்றாவது வாகனம் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

மேலும், இந்த விபத்தின் போது வாகனம் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதாகவும், அமைச்சர் விரைவில் வீட்டுக்குச் செல்ல விரும்பியதாகவும் வாகன சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்போது இடதுபுறம் வந்த மற்றைய காரை முந்திச்செல்ல முற்பட்ட போது, ​​தனக்கு முன்னால் பயணித்த பாரவுர்தியை கண்டதாகவும், ஆனால் பயம் காரணமாக வாகனத்தை வீதியின் வலது பக்கம் கொண்டு வர முடியாமல் போனமையினால் இந்த விபத்து நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வாகன சாரதியின் வாக்குமூலங்களில் சிக்கல்கள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.
குறித்த சாரதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சாரதியின் கைத்தொலைபேசி இரகசிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,நெடுஞ்சாலையில் உள்ள பாதுகாப்பு கேமரா அமைப்பும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...