tamilni 500 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவின் விபத்தில் சிக்கிய மூன்றாவது வாகன சாரதியின் வாக்குமூலத்தில் சிக்கல்

Share

சனத் நிஷாந்தவின் விபத்தில் சிக்கிய மூன்றாவது வாகன சாரதியின் வாக்குமூலத்தில் சிக்கல்

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது வாகனம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விபத்துக்குள்ளான இரு வாகனங்களின் சாரதிகளும் மூன்றாவது வாகனத்தை குறிப்பிட்டுள்ளதால், நெடுஞ்சாலைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிவேகம், மோசமான தெரு விளக்குகள், கவனக்குறைவு மற்றும் மூன்றாவது வாகனம் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

மேலும், இந்த விபத்தின் போது வாகனம் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதாகவும், அமைச்சர் விரைவில் வீட்டுக்குச் செல்ல விரும்பியதாகவும் வாகன சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்போது இடதுபுறம் வந்த மற்றைய காரை முந்திச்செல்ல முற்பட்ட போது, ​​தனக்கு முன்னால் பயணித்த பாரவுர்தியை கண்டதாகவும், ஆனால் பயம் காரணமாக வாகனத்தை வீதியின் வலது பக்கம் கொண்டு வர முடியாமல் போனமையினால் இந்த விபத்து நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வாகன சாரதியின் வாக்குமூலங்களில் சிக்கல்கள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.
குறித்த சாரதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சாரதியின் கைத்தொலைபேசி இரகசிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,நெடுஞ்சாலையில் உள்ள பாதுகாப்பு கேமரா அமைப்பும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

Screenshot 2025 12 18 075235
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...