tamilni 476 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் ஆபத்தான நிலையில் பாரிய கட்டடம்

Share

கொழும்பில் ஆபத்தான நிலையில் பாரிய கட்டடம்

கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கோபுரம் எனப்படும் உயரிய கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 50 மாடிகளுக்கு மேல் உள்ள இந்த கட்டடம் ஓராண்டுக்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளதோடு அதன் மேற்கூரையில் உள்ள கிரேன் பயன்படுத்தப்படாமல் பாதிப்படைந்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு கோட்டை வீதியிலுள்ள பரபரப்பான போக்குவரத்திற்கும் அருகிலுள்ள கட்டடங்களுக்கும் கூட இது பெரும் அனர்த்தத்தை உருவாக்கும் என பலர் கூறுகின்றனர்.

இதேவேளை இந்த கட்டட வளாகத்தில் மழையினால் தேங்கி நிற்கும் நீர் காரணமாக டெங்கு நுளம்பு பரவுவதற்கான அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் இன்னும் இந்த திட்டம் இருப்பதாகவும், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறினார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...