tamilni 445 scaled
இலங்கைசெய்திகள்

மோசமான கட்டத்தில் இலங்கை: மக்களை ஏமாற்றும் அரசு

Share

மோசமான கட்டத்தில் இலங்கை: மக்களை ஏமாற்றும் அரசு

ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 7 வீதமாக உயரும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் நிச்சயமாக ஜனவரி மாத பணவீக்க வீதம் 9 வீதத்திற்கு மேல் உயரும் வாய்ப்புகள் அதிகம் என இலங்கையின் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பணவீக்கத்தை சராசரியாக 4-6 சதவீதமாக பராமரிக்க முடியும் என்று ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தாலும், தற்போதைய விலை உயர்வு மற்றும் பொருளாதார சூழலின் படி பணவீக்கம் ஆண்டு முழுவதும் இதை விட அதிகமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பணவீக்கம் 2.5 வீதத்தால் அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கணித்திருந்த போதிலும், எதிர்வரும் ஏப்ரல் பண்டிகை காலப்பகுதிக்குள் பணவீக்கம் 9-10 வீதமாக அதிகரிப்பதை நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில வர்த்தகர்கள் VAT வரியை பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்தி வருவதாகவும், ஆனால் அரசாங்கம் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் குறைந்த அளவிலான பொருளாதார வளர்ச்சியும் பணவீக்க உயர்வை பாதிக்கிறது மற்றும் அரசாங்கம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்தாலும், சர்வதேச நாணய நிதியம் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...