2 10 scaled
உலகம்செய்திகள்

அடுத்த மிஸ் இங்கிலாந்து அழகி என எதிர்பார்க்கப்பட்ட இளம்பெண் போட்டியிலிருந்து விலகல்: காரணம் என்ன தெரியுமா?

Share

அடுத்த மிஸ் இங்கிலாந்து அழகி என எதிர்பார்க்கப்பட்ட இளம்பெண் போட்டியிலிருந்து விலகல்: காரணம் என்ன தெரியுமா?

மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு இளம்பெண், போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த நடாஷா (Natasha Beresford, 26), உலகின் மேக் அப் அணியாத அழகிப்போட்டியில் வென்ற முதல் பெண் ஆவார்.

மிஸ் லண்டன் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், மே மாதம் Wolverhamptonஇல் நடைபெற உள்ள மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்க இருந்தார். அவர் மிஸ் இங்கிலாந்து அழகியாக நிச்சயம் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் ஆவார்.

ஆனால், தான் அந்தப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என தற்போது அறிவித்துள்ளார் நடாஷா.

நடாஷா போட்டியிலிருந்து விலக என்ன காரணம் என்றால், மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ள மே மாதத்தின் அதே வார இறுதியில் அவரது நெருங்கிய தோழியின் திருமணம் நடைபெற உள்ளதாம்.

தான் தன் தோழியின் திருமணத்தில், மணமகளின் தோழியாக அவருடன் நடைபயிலப்போவதாக ஏற்கனவே அவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டதாகவும், ஆகவே தன்னால் அழகிப்போட்டியில் கலந்துகொள்ளமுடியாது என்றும் கூறியுள்ளார் நடாஷா.

நடாஷாவுக்கு பதிலாக மிஸ் லண்டன் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த Temi Adeyemi (26) என்னும் இளம்பெண் தற்போது மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

Share
தொடர்புடையது
arrest 1200px 28 08 2024 1000x600 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூ. 8 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு மதுபானம்: 69 போத்தல்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது!

எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து,...

bb70ef27 25f3 4d2d aac2
உலகம்செய்திகள்

மசகு எண்ணெய் கடத்தல்: ஈரானுக்கு உதவிய வெனிசுலா கப்பல் நிறுவனம், 6 கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய தடை!

கரீபியன் கடற்பகுதி வழியாக ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்திச் செல்ல உதவியதாக வெனிசுலா மீது குற்றம்...

National Strategy child sexual abuse
உலகம்செய்திகள்

இலங்கைப் பிரஜை மீதான சிறுமி கடத்தல், துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள்: மேற்கு லண்டன் நீதிமன்றில் மறுப்பு!

மேற்கு லண்டனில் உள்ள அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 20...

articles2FxGu0xvsmkR7xnWvm5gj0
செய்திகள்விளையாட்டு

மறுநாள் ஜோன் சினாவின் கடைசி WWE போட்டி: குந்தரை எதிர்கொள்கிறார் ஜாம்பவான்!

மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, தனது புகழ்பெற்ற இரண்டு...