1996740 ship scaled
உலகம்செய்திகள்

14 கப்பல்களில் கச்சா எண்ணெய்… விற்க முடியாமல் கடும் போராட்டத்தில் ரஷ்யா

Share

14 கப்பல்களில் கச்சா எண்ணெய்… விற்க முடியாமல் கடும் போராட்டத்தில் ரஷ்யா

அமெரிக்கத் தடை உள்ளிட்ட சிக்கல் காரணமாக 14 கப்பல்களில் நிரப்பப்பட்ட கச்சா எண்ணெய் விற்க முடியாமல் பல வாரங்களாக ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரிய கடற்பகுதியில் பல வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது ரஷ்யாவின் 14 எண்ணெய் கப்பல்கள். ஒவ்வொரு கப்பலிலும் 10 மில்லியன் பீப்பாய் அளவுக்கு கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்கத் தடைகள் மற்றும் கட்டணச் சிக்கல்கள் காரணமாக இதுவரை விற்கப்படவில்லை என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. சுமார் ஒரு மாத காலம் உற்பத்தி செய்த இந்த கச்சா எண்ணெய் மொத்தமாக 1.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்றே கூறப்படுகிறது.

ரஷ்யாவின் Sakhalin-1 திட்டத்தில் அமெரிக்காவின் Exxon Mobil நிறுவனம் இணைந்து செயல்பட்டு வந்தது. ஆனால் ரஷ்ய- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் 2022ல் Exxon Mobil இந்த திட்டத்தில் இருந்து வெளியேறியது.

அதன் பின்னர் ரஷ்யாவால் தொடர்ந்து அந்த திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது. இதனால் அதன் உற்பத்தி மொத்தமாக சரிவடைந்தது. அதிலிருந்து முழுமையாக மீளவில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...