tamilni 356 scaled
உலகம்செய்திகள்

இஷா புயலை அடுத்து Jocelyn புயல்: பயணத்திற்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை

Share

இஷா புயலை அடுத்து Jocelyn புயல்: பயணத்திற்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை

பிரித்தானியாவில் இஷா புயல் மணிக்கு 107 மைல் வேகத்தில் புரட்டியெடுத்துள்ள நிலையில், தற்போது Jocelyn புயல் தொடர்பில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்று மற்றும் மழை ஏற்பட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அம்பர் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு மற்றும் மேற்கு ஸ்கொட்லாந்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அம்பர் எச்சரிக்கை அமுலில் இருக்கும். மட்டுமின்றி மின்சாரம் தடைபடவும், தொலைபேசி இணைப்பு பாதிக்கப்படவும், கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படவும், போக்குவரத்து தாமதமாகலாம் என்றும், சாலைகள் மூடப்பட வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மிட்லாண்ட்ஸ், வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் நாளை மதியம் 1 மணி வரை மஞ்சள் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஸ்காட்லாந்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு ஸ்கொட்லாந்தில் இரவு 11 மணி முதல் காலை 9 மணி வரை பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஷா புயலாம் தடைபட்ட போக்குவரத்து தற்போது Jocelyn புயல் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, பிற்பகல் 3.30 மணிக்குப் பிறகு பிரஸ்டனுக்கு வடக்கே பயணிக்க வேண்டாம் என்று அவந்தி வெஸ்ட் கோஸ்ட் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது.

Jocelyn புயல் காரணமாக ரயில் சேவைகள் மொத்தமாக பாதிக்கப்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தேசிய ரயில் சேவை அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...