tamilni 333 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இன்று முதல் புதிய நடைமுறை

Share

கொழும்பில் இன்று முதல் புதிய நடைமுறை

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் CCTV காட்சிகளை பயன்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகள் CCTV காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு அபராத சீட்டுகள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தூர பிரதேசத்தில் இருந்து கொழும்புக்கு வரும் சாரதி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறினால் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொலிஸாரின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த முறைமையின் கீழ் கொழும்பிற்குள் நுழையும் வாகனங்கள் இன்று முதல் 108 CCTV கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

இந்த புதிய வேலைத்திட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அதற்கமைய, கொழும்பு நகருக்குள் நுழையும் 09 இடங்களில் அறிவிப்பு பலகைகளை பொருத்துவதற்கு பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...