tamilnih 91 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

Share

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

இந்த வருடம் மார்ச் மாதம் வரையான ஐயாயிரம் ரூபா வாழ்வாதார கொடுப்பனவுக்கான நிலுவை தொகை அடுத்த வருடம் (2025) ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் இதனை அறிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் 7800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கவும், ஏப்ரல் முதல் அதிகரிப்பை வழங்கவும் முன்மொழியப்பட்ட போதிலும், இம்மாதம் முதல் மார்ச் வரையில் அந்த தொகையில் ஐம்பது சதவீதத்தை வழங்குவதற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இம்மாதம் முதல் மார்ச் வரை தலா ஐந்தாயிரம் ரூபாவும், மீதமுள்ள தொகை அடுத்த ஆண்டும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவான 7800 ரூபாவுடன் ஐயாயிரம் ரூபாவை சேர்த்து எதிர்வரும் மார்ச் மாதம் வரை பன்னிரண்டாயிரத்து எண்ணூறு ரூபாவை (12800) செலுத்துமாறும் ஏப்ரல் மாதம் முதல் கொடுப்பனவை பதினேழாயிரத்து எண்ணூறு ரூபாவாக அதிகரிக்குமாறும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, சாதாரண மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு வேலை நாட்களின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...