2 8 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

பொலிஸாரின் குறைபாடுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சஹ்ரான் உள்ளிட்டவர்களை கைது செய்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தரப்பில் பாரிய கவனயீன குறைப்பாடு ஏற்பட்டமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் யுக்திய நடவடிக்கை எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டின் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 17 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றுக்கும், சட்டத்தரணிகளுக்கும் தேவையானவாறு தாம் செயற்பட போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை நிறுவனங்களை தாம் கண்டுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த யுக்திய நடவடிக்கையில் தனிப்பட்ட ரீதியில் கிடைப்பதற்கோ இழப்பதற்கோ எதுவுமில்லை எனவும், இந்த அமைச்சுப் பதவியில் கடமையாற்றுவதற்கு இடமளிக்கப்படாவிட்டால் இதனை தூக்கி எறிந்து விட்டு செல்வேன் எனவும், இதில் எவ்வித இலாபமும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...