tamilni 304 scaled
இலங்கைசெய்திகள்

6 வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Share

6 வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு

கிளிநொச்சி போராலை என்ற இடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 143 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி பேராலை என்ற இடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 143 கிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு நேற்றைய (18.01.2024) தினம் குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது நேற்றைய தினம்(18) தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரண்டாது நபர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலாவது நபர் சார்பாக சட்டத்தரணி சிறிகாந்தா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையில் அரச சட்ட வாதி என் என். அர்ஜுனகுமார் முன்னிலையாகியிருந்தனர்.

எதிர்தரப்பு சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குறித்த எதிர்தரப்பு நபர் இதற்கு முன்னர் குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றுள்ளவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையாகவும் காணப்படுகின்றார் எனவும் தண்டனை குறைப்பு விண்ணப்பத்தை செய்து இருந்தார்.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக் களத்தின் சார்பாக முன்னிலையான சட்ட வாதி தண்டனையானது ஒரு முன்னோடியான தண்டனையாக இருக்க வேண்டும் குற்றவாளிக்கான தண்டனையானது ஒரு தனிநபருக்கான தண்டனையாக கருதவது அல்லாது ஒரு எதிர்கால இளம் சமூகத்தை பாதுகாக்கின்ற ஒரு விடயமாக கருதி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை செவிமடுத்த நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...