5 2 scaled
உலகம்செய்திகள்

நடுவானில் விமானப் பணிப்பெண்ணை மதுபோதையில் கடித்த பயணி: விமானி எடுத்த அதிரடி முடிவு

Share

மது போதையில் பயணி ஒருவர் விமான குழுவை சேர்ந்த பெண் ஒருவரை கடித்ததை தொடர்ந்து விமானம் ஜப்பானுக்கு மீண்டும் திரும்பியது.

ஜப்பானில் இருந்து அமெரிக்கா செல்லும் ANA விமானத்தில் பயணி ஒருவர் உச்சக்கட்ட மது போதையில் விமான குழுவை சேர்ந்த பணிப்பெண் ஒருவரை கடித்த சம்பவம் விமானத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருந்த போது மது போதையில் இருந்த 55 வயது அமெரிக்க பயணி ஒருவர், விமானப் பணிப்பெண் ஒருவரின் கையை கடித்தார், அதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது என ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் AFPயிடம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி: அவரின் தற்போதைய நிலை என்ன?
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி: அவரின் தற்போதைய நிலை என்ன?
இந்த சம்பவத்தின் போது விமானத்தில் 159 பயணிகள் இருந்ததாகவும் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து விமானத்தை மீண்டும் ஜப்பான், டோக்கியோவில் Haneda விமான நிலையத்திற்கு விமானி திருப்பி தரையிறக்கினார்.

பொலிஸார் உடனடியாக அவரை கைது செய்து விசாரணையை தொடங்கினர், இந்த விசாரணையின் போது தான் தூக்க மாத்திரை போட்டு இருந்ததாகவும், என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் அந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்து இருப்பதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய விமான சேவைகளை பாதிக்கும் சமீபத்திய சம்பவம் இதுவாகும். ANA ஏர்லைன்ஸில் நடைபெறும் இரண்டாவது சமீபத்திய சம்பவம் இதுவாகும்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...