tamilnih 81 scaled
இலங்கைசெய்திகள்

மதுபானங்களுக்கு வரியை குறைக்குமாறு கோரிக்கை

Share

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு மதுவரித் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் ஜே.எம். குணசிறிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பு காரணமாக மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே வரியை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான மதுவரி வருமானமாக 232 பில்லியன் ரூபாவை ஈட்ட முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உரிய முறையில் வரியை செலுத்துமாறும், போலி மதுபான உற்பத்திகளை தடுக்க ஸ்டிர்கர்களை போத்தலில் ஒட்டுமாறும் ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.

மதுவரி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனுமதிப்பத்திரங்களின் கட்டண அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது எனவும், ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்த வர்த்தமானி அறிவித்தல் மீள பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...